1 of 39

�பொருளியல் பாடம் 1

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

2 of 39

நாட்டு வருமானம் வரையறு

  • நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு ஆகும்
  • பொதுவாக நாட்டு வருமானத்தை மொத்த நாட்டு உற்பத்தி GNP அல்லது நாட்டு வருமானம் என அழைக்கிறோம்

3 of 39

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

  • ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்திக் காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்

4 of 39

GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக

  • பொருளாதார வளர்ச்சியின்ஆய்வு பற்றி அறிந்து கொள்ளப் பயன்படுகிறது.
  • பணவீக்கம் மற்றும் பணவாட்டத்தின் சிக்கல்கள் பற்றி அறிய உதவுகிறது.
  • உலகின் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது.
  • வாங்கும் திறனை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது.
  • பொதுத்துறை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள பயன்படுகிறது
  • பொருளாதார திட்டமிட வழிகாட்டியாகவும் பயன்படுகிறது.

5 of 39

தனிநபர் வருமானம் என்றால் என்ன?

  • நாட்டு வருமானத்தை மக்கள் தொகையால் வகுத்தால் தனிநபர் வருமானம் அல்லதுதலா வருமானம் கிடைக்கும்.
  • தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத்
  • தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
  • நாட்டு வருமானம்
  • தலா வருமானம் = ………………………………………
  • மக்கள் தொகை

6 of 39

மதிப்புக் கூட்டு வரியை எடுத்துக்காட்டுடன் வரையறு

  • மதிப்புக்கூட்டு முறையில் ஒவ்வொரு இடைநிலைப் பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால் இறுதி பண்டத்தின் மதிப்பை அளவிடலாம்.
  • உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலைப் பண்டங்களின் மதிப்பை சேர்க்கும் பொழுது உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.
  • உதாரணமாக ஒரு கோப்பைத் தேநீரின் சந்தை மதிப்பைக் கணக்கிட இடைநிலைப் பண்டங்களான டீ தூள், பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் மதிப்பைக் கூட்டினால் தேநீரின் மதிப்பு கிடைக்கிறது.

7 of 39

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக

  • வேளாண் கொள்கை
  • தொழில்துறைக் கொள்கை
  • புதிய பொருளாதாரக் கொள்கை

8 of 39

சிறுகுறிப்பு வரைக: 1. மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH) 2.மனித மேம்பாட்டு குறியீடு ( HDI)

  • மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற வார்த்தை 1972இல் பூட்டான் அரசால் உருவாக்கப்பட்டது.
  • அவர் GNP ஐ விட GNH மிக முக்கியம் என்று கூறினார்.
  • ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சிக்கான ஒரு முழுமையான அணுகுமுறைக்கு-”மகிழ்ச்சி” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.அதன் உறுப்பு நாடுகள் மகிழ்ச்சியே அடிப்படை மனித குறிக்கோள் என ஏற்றுக் கொண்டன.
  • மொத்த தேசிய மகிழ்ச்சியில் நான்கு தூண்கள்:
  • நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • கலாசாரத்தை பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்
  • நல்ல ஆட்சித்திறன
  • மனித மேம்பாட்டு குறியீடு (HDI)
  • மனித மேம்பாட்டு குறியீடு என்பது பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு ,வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கை தரம் , GDP யின்மடக்கை செயல்பாடு என கணக்கிடப்படடு ,வாங்கும் சக்தியை சமநிலைக்கு சரி செய்யப்படுகிறது.

9 of 39

பாடம் 2

  • உலகமயமாக்கல் மற்றும் வர்த்தகம்

10 of 39

உலகமயமாக்கல் என்றால் என்ன?

உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பது ஆகும்.

அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் தாராளமயமாக்கல் செயல்முறையைக்குறிக்கிறது.

உலகமயமாக்கலில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான சந்தைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

  • உலகமயமாக்கல் என்பது உலகப் பொருளாதாரத்துவ நாடுகளை ஒருங்கிணைப்பது ஆகும்.

அடிப்படையில் உலகமயமாக்கல், சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல்முறையைக் குறிக்கிறது.

உலகமயமாக்கலில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான சந்தைகள் ஒருங்கிணைக்கப் படுகின்றன.

11 of 39

உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக

  • தொன்மையான உலகமயமாக்கல்
  • இடைப்பட்ட உலகமயமாக்கல்
  • நவீன உலகமயமாக்கல்

12 of 39

பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு வரைக

  • பன்னாட்டு நிறுவனம் என்பது பல நாடுகளில் தங்களது நிறுவனங்களைத் தொடங்கி ,பண்டங்களையும் அல்லது பணிகளையும் செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு பெரும் நிறுவனம் ஆகும்.
  • பன்னாட்டு நிறுவனங்களில் சர்வதேச நிறுவனங்கள் அல்லது பன்னாட்டு அமைப்பு என்றும் கூறலாம்.
  • எடுத்துக்காட்டு பெப்சி நிறுவனம் ,கோகோ கோலா நிறுவனம், டிவிஎஸ் ,பஜாஜ் ,பாரத ஸ்டேட் வங்கி.

13 of 39

உலகமயமாக்கலைச் சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக

  • சிறு தொழில்களைத்தவிர தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
  • பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
  • இந்தியாவின் பொருட்களின் ஏற்றுமதி பரிமாற்றத்தில் நிலையான பணத்தின் மாற்று வீதத்தை சரி செய்தது.
  • அயல்நாட்டு செலாவணி ஒழுங்குமுறை பொருத்தமாகத்திருத்தப்பட்டது.
  • இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட சட்டரீதியான நீர்மை விகிதம் அதிகரிக்கப்பட்டது

14 of 39

நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?

  • நியாயமான வர்த்தகமானது சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும் ,கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழிமுறையாகும்

15 of 39

நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக

  • பொருளாதார ரீதியில் பின்தங்கிய உற்பத்தியாளர்கள் வாய்ப்புகளை உருவாக்குதல்.
  • வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு
  • சுற்றுச்சூழலுக்கு மதிப்பளித்தல்

16 of 39

உலக வர்த்தக அமைப்பின் முக்கிய நோக்கம் யாது?

  • அயல்நாட்டுவாணிபத்திற்காக விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்
  • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
  • முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்
  • முழு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்.
  • உலக வர்த்தகத்தில் வளர்ந்து வரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.

17 of 39

உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக

  • ஒரு சிறந்த பொருளாதாரம் மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது
  • வாழ்க்கைத்தரம் அதிகரித்துள்ளது.
  • உலகமயமாக்கல் வர்த்தகத்தை வேகமாக அதிகரித்து அதனால் அதிக மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.

18 of 39

பாடம் 3

  • உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

19 of 39

FAO வின் படிஉணவுப் பாதுகாப்பைஉணவுப் பாதுகாப்பை வரையறு

  • எல்லா மக்களும் ,எல்லா நேரங்களிலும், போதுமான பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுக்கான உடல் ,சமூக மற்றும் பொருளாதார அணுகுமுறையைக் கொண்டிருக்கும் போது, அவர்களின் உணவு தேவைகளையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் உணவு பாதுகாப்பு இருக்கிறது"

20 of 39

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படை கூறுகள் யாவை?

  • உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு மூன்று அடிப்படைக் கூறுகளைக் கொண்டது.
  • உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும் இது உள்நாட்டு உற்பத்தி இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்
  • உணவுக்கான அணுகல் என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்றாகும்.
  • உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாக பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்

21 of 39

பசுமைப் புரட்சியில் இந்திய உணவுக் கழகத்தின் (FC|)பங்கு என்ன?

கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கின்றன .

மானிய விலையில் உரங்கள் கிடைக்கிறது .கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைக்கிறது பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை பருவ காலத்தின் தொடக்கத்தில் அறிவிக்கப்படுகிறது…

அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் இந்திய உணவுக் கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது .

மிகப்பெரிய சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைக்கப்படும் தானியங்கள் ஆண்டு முழுவதும் வழங்கப்படுகிறது.

உணவு கழகங்களுக்கு தானியங்களை விற்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் தானியங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட விலையைப் பெறுகின்றனர்.

22 of 39

பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன?

  • தானியங்கள் உற்பத்தி செய்யும் நிலப்பரப்பு அதிகரித்தது.
  • தானியங்களின் விளைச்சல் அதிகரித்தது
  • பசுமைப் புரட்சியின் விளைவாக இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது.
  • உணவு தானிய உற்பத்தியில் விரைவான அதிகரிப்பு பால், கோழி மற்றும் மீன் வளத்துறையிலும் பொருத்தமான தொழில்நுட்பங்களுக்கு வழிவகுத்தன. இதனால் பால் ,முட்டை மற்றும் மீன் உற்பத்தி பல மடங்கு பெருகியுள்ளது.
  • பால் உற்பத்தியில் 8 மடங்கும் முட்டை உற்பத்தியில் 40 மடங்கு அதிகரித்துள்ளது

23 of 39

தமிழ்நாட்டில் உள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயர்களை எழுதுக

  • புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊட்டச்சத்து உணவுத் திட்டம்.
  • ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம்.
  • பிரதம மந்திரி கிராமோ தயா யோஜனா திட்டம்.
  • தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்.
  • மதிய உணவு திட்டம்.

24 of 39

பாடம்-4

  • அரசாங்கமும் வரிகளும்

25 of 39

வரி வரையறுக்க

  • வரிகள் என்பதில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்துக்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணமே ஆகும்.
  • அல்லது
  • பேராசிரியர் செழியன் கருத்துப்படி” வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகை ஆகும் .அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாக செலுத்த வேண்டியது வரி”

26 of 39

அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?

  • அரசு மக்களுக்கு பல செயல்களை நிறைவேற்ற வேண்டியது இருக்கிறது .அதற்கு அரசுக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே நாம் அரசுக்கு வரி செலுத்த வேண்டும்
  • பின்வரும் செலவினங்களுக்கு அரசுக்கு பணம் தேவைப்படுகிறது
  • பொருளாதார உட்கட்டமைப்பு செலவுகள் (போக்குவரத்து, துப்புரவு ,கல்வி ,உடல்நலம் ,பொது பாதுகாப்பு)
  • ராணுவம்
  • அறிவியல் ஆராய்ச்சி
  • கலாச்சாரம் மற்றும் கலைகள்
  • பொதுப்பணிகள் மற்றும் பொதுக் காப்பீடுகள்

27 of 39

வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக

  • நேர்முக வரிகள்:
  • வருமான வரி சொத்து வரி மற்றும் நிறுவன வரி
  • மறைமுக வரிகள்:
  • முத்திரைத்தாள் வரி ,பொழுதுபோக்கு வரி, சுங்க தீர்வை மற்றும் GST

28 of 39

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி சிறுகுறிப்பு வரைக

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வழிகளில் ஒன்றாகும்.
  • இந்த வரி இந்திய பாராளுமன்றத்தில் மார்ச் 29 2017 நிறைவேற்றப்பட்டு ஜூலை 1 2017 இல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள்" ஒரு நாடு -ஒரு அங்காடி- ஒரு வரி” என்பதாகும் .இது ஒரு “ஒருமுனை வரி" ஆகும்.

29 of 39

வளர் வீத வரி என்றால் என்ன?

  • வளர் வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத் தளம் அதிகரிக்கும்போது வரி விகிதமும் அதிகரிக்கிறது.
  • வளர் வீதவரியைப் பொறுத்தவரையில் வருமானம் அதிகரிக்கும்போது வரி விகிதமும் அதிகரிக்கிறது.

30 of 39

வரி ஏய்ப்பு என்றால் என்ன?

  • தனிநபர்கள் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்டவிரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரிஏய்ப்பு எனப்படும்.
  • வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
  • விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
  • மறைக்கப்பட்ட பணம்
  • கடல்கடந்த கணக்குகளில் விபரங்களை மறைத்தல் ஆகியவை முக்கிய வரிஏய்ப்பு நடவடிக்கைகள் ஆகும்.

31 of 39

வரிக்கும் கட்டணத்திற்கு உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக

  • வரி
  • வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாகச் செலுத்துகின்ற செலுத்துகை ஆகும்.
  • வரி என்பது கட்டாய செலுத்துகையாகும்.
  • .கட்டணம்
  • கட்டணம் என்பது அணிகளைப் பயன்படுத்துவதற்காகச் செலுத்துவதாகும்.
  • கட்டணம் என்பது தன்னார்வமாகச் செலுத்துவதாகும்

32 of 39

பாடம் 5

தமிழ்நாட்டில் தொழில் துறை தொகுப்புகள்

33 of 39

விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?

  • நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் குறைந்து கொண்டே வருவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்களை ஈர்த்துக் கொள்வதில் சில வரையறைகளைப் பின்பற்ற நேரிடுகிறது.
  • மேலும் பெருமளவிலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பி இருப்பதால் கூலியை அதிகரிக்க வாய்ப்பில்லை.

34 of 39

தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?

  • ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நீண்ட காலமாக அங்கு தங்கி .( எடுத்துக்காட்டு :கைத்தொழில் நெசவு வளர்ச்சி)
  • சில துறைகளில் ஒரு பெரிய நிறுவனம் நிறுவப்படும் போது அதன் உள்ளீடு மற்றும் பணிகளின் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் தொகுப்பு நிறுவனங்கள் தோன்றக்கூடும்.
  • வட்டார மூலப் பொருள்களைப் பயன்படுத்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கங்கள் முடிவு செய்தால் தொழில் தொகுப்பு தோன்றக்கூடும்

35 of 39

தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக

  • தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் (SIPCOT)
  • தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம் 1971-இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழில் தோட்டங்களை அமைத்துள்ளது.
  • தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் (TIDCO)
  • தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் ஒரு நிறுவனமாகும்
  • தமிழ்நாடு சிறுதொழில் கழகம் (TANSI)
  • தமிழ்நாடு சிறுதொழில் கழகம் சிறு நிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில் துறை நிறுவனமாகும்

36 of 39

தற்போது தமிழ்நாட்டில் தொழில் மயமாதலின் சிக்கல்கள் யாவை?

வேதிப்பொருட்கள் /ஜவுளித்துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தைக் கெடுக்கிறது .இந்த திரவக் கழிவுகள் நீர்நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிலங்களையும் மாசுபடுத்துகிறது.

உலகளாவிய அளவில் போட்டி போடுவதற்காக முதன்மையான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலைவாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது .

பணியாளர்களின் தரமானது இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணி அமர்த்துவதால் குறை ஏற்படுகிறது.

37 of 39

தொழில் முனைவோர் என்பவர் யாவர்?

  • தொழில் முனைவோர் என்பவர் புதிய சிந்தனைகளுக்கும் வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
  • அவரிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள் வலிமையான குழுவை அமைக்கும் திறமைகள் மற்றும் தேவையான தலைமைக்கான பண்புகள் இருக்கும்.

38 of 39

தொழில் முனைவு என்றால் என்ன?

  • தொழில் முனைவு என்பது தொழில் முனைவோர் தங்கள் தொழிலைப் பெருக்குவதற்கான செயல்முறைகள் ஆகும்.
  • தொழில்முனைவு ஒன்றை உருவாக்குவதற்கு மேலும் விரிவுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.

39 of 39

சிலைடு தயாரிப்பு:

சி. ராமராஜ் M.A.,B.Ed., TTC.,

ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி,

பெரியநாயக்கன்பாளையம்,

கோவை - 20