இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின், புலம்பெயர் தேசங்களில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களை ஒருங்கிணைத்தல்.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவுகளின் சங்கம் - பிரித்தானியா
இலங்கையில் இயங்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கங்களின் நீதிகோரும் போராட்டங்களுக்கு பலம் சேர்க்கும் வகையிலும், இலங்கையில் இருந்து வெளியேறி புலம்பெயர் நாடுகளில் வசித்துவரும், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒருங்கிணைந்து எமது குரலை சர்வதேச மட்டத்தில் ஒலிக்கச் செய்யும் நோக்கிலும் உருவாகியுள்ளது “இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவுகளின் சங்கம் - பிரித்தானியா (Association of Exiled Relatives of the Enforced Disappeared in Sri Lanka - UK)
புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் எம்முடன் இணைந்து செயற்பட விரும்பினால் உங்கள் விபரங்களை கீழுள்ள படிவத்தில் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கு தங்களின் ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.