குருநாகல் மாவட்டத்தின் சியம்பலகஸ்கொடுவ அந்நூர் அரபுக் கல்லூரியானது, சர்வகலாசாலையின் அனுமதியையும் உத்தரவாதத்தையும் பெற்றிருப்பதுடன், சகல வசதிகளுடன் கற்பதற்கான கல்விச் சூழலையும், நீண்டகால அனுபவம் வாய்ந்த அரச ஆசிரியர்கள் மற்றும் அரபு பட்டதாரி ஆசிரியர்களையும் உள்ளடக்கிய ஆசிரியர் குழாமையும் கொண்டிருப்பது இக்கல்லூரியின் சிறப்பம்சமாகும்.
மனனப் பிரிவு 03 வருடங்களும், ஷரீஆ பிரிவு 06 வருடங்களுமாக மொத்தம் 09 வருட காலத்தைக் கொண்ட எமது பாடத்திட்டம் கீழ்வரும் தகைமைகளை உள்ளடக்கியதாகும்:
1. அல் குர்ஆன் மனனம்
2. கா.பொ.த. சாதாரண தரம்
3. அஹதிய்யா பரீட்சை
4. தர்மாச்சார்ய பாரீட்சை
5. அல் ஆலிம் முதவஸ்ஸிதா
6. அல் ஆலிம் ஸானவிய்யா
7. ஷரீஆ உயர் தரம் (மௌலவி இ ஆலிம்)
8. கா.பொ.த உயர் தரம் (கலை/கணிதம்/விஞ்ஞானபிரிவூகள்)
9. பல்கலைக்கழக நுழைவூக்கான சிறப்புத்தேர்ச்சி
10. தொழில் சார் கல்விஇ கணனி இ தொழிநுட்பம்
நுழைவூக்கான தகைமைகள்
- கல்வியைத்தொடர்வதற்கான உடல் ஆரோக்கியம் உடையவராயிருத்தல்.
- நற்குணமுடையவராயிருத்தல்.
மனனப்பிரிவூ
- 2026 ஜனவரி 31ம் தகத 11 வயதுைடயவர்.
- 2025 ஆம் ஆண்டு தரம் 05 ல் கற்பவர்.
- தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஷரீஆப்பிரிவூ
- 2026 ஜனவரி 31ம் தகத 14 வயதுைடயவர்.
- 2025 ஆம் ஆண்டு தரம் 08 ல் கற்பவர்.
- அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து மீட்டல் (தௌரா) முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.